1. யாக்கோபு: யாக்கோபு ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும், உலகப்பிரகாரமான ஆசீர்வாதத்தையும் விரும்பினார். கர்த்தருடைய ஆசீர்வாதத்தையும், தகப்பனுடைய ஆசீர்வாதத்தையும் தேடினார். அதனால் யாப்போக்கின் ஆற்றின் கரையில் கர்த்தரோடு போராடி ஜெபித்து வெற்றி பெற்றான். கோலும், தடியுமாக யோர்தானைக் கடந்தவன் இரண்டு பரிவாரங்களை உடையவனானான் – ஆதி 32:10
2. யோசேப்பு: யோசேப்பு பல வருடங்கள் சிறைச்சாலையில் பாடு அனுபவித்தாலும், கர்த்தர் மனதுருகி, தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்திய ரூபனுடைய சேஷ்டபுத்திர பாகத்தை யோசேப்புக்குக் கொடுத்து யோசேப்பை இரண்டு மடங்கு ஆசீர்வதித்தார் – 1நாளா 5:1
3. யோபு: யோபின் சொத்துக்கள், மிருகஜீவன்கள் அனைத்தையும் சாத்தான் அழித்தான். அவனுடைய பத்து பிள்ளைகளும் மரித்தார்கள். பயங்கரமான நோய்களும், போராட்டங்களும் வந்தன. ஆனால் கர்த்தர் முன்னிலமையைப் பார்க்கிலும் பின்னிலைமையை ஆசீர்வதித்தார். இரண்டந்தனையாக கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார் – யோபு 42:10, 12, 13
4. எலிசா: எலிசா ஆவியின் வரங்களுக்காக ஏங்கினார். ஏர்மாடுகளை விட்டார். உறவினர்களை மறந்தார். எலியாவின் மேலிருந்த ஆவியின் வரம் தமக்கு இரட்டிப்பாக கிடைக்க வேண்டும் என வாஞ்சித்து அந்த ஏக்கத்தில் எலியாவின் பின்னாலே சென்று பெற்றுக் கொண்டான் – 2இரா 2:9
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…