பைபிள் வசனங்கள்

ஏழைகளை தேவன் பராமரிக்கும் விதம்

  • உபாகமம் 10 : 18 “அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.”
  • 1 சாமுவேல் 2:8 “கர்த்தர் சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து, எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தை சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்;”
  • சங்கீதம் 10:14 “ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே.”
  • சங்கீதம் 35:10 “சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கு ஒப்பானவன் யார்?”
  • எரேமியா 20:13 “கர்த்தர் எளியவனுடைய ஆத்துமாவை பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.”
  • யோபு 5:15 “எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்.”
  • சங்கீதம் 12:5 “ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர் பெருமூச்சின் நிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, நான் அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
  • ஏசாயா 41:17 “சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத்தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வரளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவி கொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.”
  • யாக்கோபு 2:5 “தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், — தெரிந்து கொள்ளவில்லையா?”
  • ஓசியா 14:3 “திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம் பெறுகிறான்.”
  • எரேமியா 49:11 “திக்கற்றவர்களாய்ப் போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, கர்த்தர் அவர்களை உயிரோடே காப்பாற்றுவார்.”
  • சங்கீதம் 146:9 “பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; கர்த்தர் திக்கற்ற பிள்ளையையும் விதவையும் ஆதரிக்கிறார்;”
  • சங்கீதம் 68:5 “கர்த்தர் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனாயிருக்கிறார்.”
  • சங்கீதம் 138:6 “கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்.”
  • ஏசாயா 66:2 “சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுக்குண்டு, கர்த்தரின் வசனத்துக்கு நடுங்குகிறவனையே கர்த்தர் நோக்கிப் பார்ப்பார்.”
  • உபா 10:18 “கர்த்தர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாயிருக்கிறார்.”
  • சிறுமைப்பட்டவனுடைய தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். – சங் 41:1
  • சங்கீதம் 72:12, 13 “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் கர்த்தர் விடுவிப்பார்.”
  • “பலவீனனுக்கும் எளியவனுக்கும் கர்த்தர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.”
Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago