கர்த்தர் ஒரு சணல்கச்சையை வாங்கி எரேமியாவின் அரையில் கட்டச் சொன்னார். பின் அதை ஐப்பிராத்து நதியின் கன்மலையின் வெடிப்பிலே ஒளித்து வைக்கச் சொன்னார். பின் அநேக நாள் சென்றபின் கர்த்தர் எரேமியாவிடம் ஒளித்து வைத்த கச்சையை எடுத்து வரச் சொன்னார். எரேமியா அதைத் தோண்டி எடுத்தபோது அந்த கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமற் போயிற்று. இந்த உவமை எதைக் காட்டுகிறதென்றால், – எரே 13:1 – 11
இஸ்ரவேலரும், யூதரும் தான் தேவனால் அணியப்பட்ட சணல்கச்சை. தேவனோடு கொண்டிருந்த நெருங்கிய உறவுக்கு அது அடையாளமாயிருந்தது. இப்போது அம்மக்கள் பயனற்றுப் போய்விட்டதால், எரேமியா சணல்கச்சையை எறிந்து விட்டது போல தேவனால் அம்மக்களும் எடுத்தெறியப்படுவர். ஐப்பிராத்துப் பகுதியில் நாடுகடத்தப்பட்ட மக்கள் அவர்களது பாவத்தால் உபயோகமற்றவர்களாகி விடுவர். அவர்களுடைய பெருமையும், மகிமையும் மறைந்து போகும்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…