1. “கொடுத்துக் கொடுத்து ஆண்டியாகி விடுவர்” என்று உலகம் கூறுகிறது. “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு.” என்று வேதம் கூறுகிறது – நீதி 11:24
2. “விட்டுக்கொடுத்து அமைதியாய்ப் பேசுவது கோழைத்தனம்.” என்று உலகம் கூறுகிறது. “நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்;” என்று வேதம் கூறுகிறது – நீதி 14:29
3. “லஞ்சம் வாங்கினால் தான் பிழைக்க முடியும்.” என்று உலகம் கூறுகிறது. “பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.” என்று வேதம் கூறுகிறது – நீதி 15:27
4. “பேச்சு சாமர்த்தியம் இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும்.” என்று உலகம் கூறுகிறது. “பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்னப்படுவான்.” என்று வேதம் கூறுகிறது – நீதி 17:28
5. “கலப்படம் செய்து, கள்ளத்தராசைப் பயன்படுத்தினால் தான் வியாபாரத்தில் முன்னேறலாம்.” என்று உலகம் கூறுகிறது. “வெவ்வேறான நிறைக்கற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.” என்று வேதம் கூறுகிறது – நீதி 20 :23
6. “குனியக்குனியக் குட்டுபவருக்குத் தாழ்ந்து போகாதே.” என்று உலகம் கூறுகிறது. “மேன்மைக்கு முன்னானது தாழ்மை.” என்று வேதம் கூறுகிறது – நீதி 18:12
7. “செத்தாலும் உன் முகத்தில் முழிக்க மாட்டேன்” என்று உலகம் கூறுகிறது. “குற்றத்தை மன்னிப்பது மகிமை.” என்று வேதம் கூறுகிறது – நீதி 19:11
8. “சும்மா விடாதே இரண்டில் ஒன்று பார்த்து விடலாம்.” என்று வேதம் கூறுகிறது. “தீமைக்குத் தீமையையும், உதாசீனத்துக்கு உதாசீனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக – ஆசீர்வதியுங்கள்.” என்று வேதம் கூறுகிறது. – 1பேது 3:9

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago