1. ஒத்னியேல்: இவர் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது ஆட்சி காலம் நாற்பது வருடங்கள். ஆற்றல் மிக்க கானான் நகரமொன்றைக் கைப்பற்றினார் – நியா 1:10 – 20
2. ஏகூத்: இவர் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது ஆட்சி காலம் எண்பது வருடங்கள். மோவாப் அரசரான எக்லோனைக் கொன்றார் – நியா 3:15 –30
3. சம்கார்: அறுநூறு பெலிஸ்தியர்களைக் கொன்றார் – நியா 3:31, 5:6 – 8
4. தெபோராள்: எப்பீராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவள். இவளது ஆட்சி காலம் நாற்பது ஆண்டுகள். சேனாதிபதி சிசெராவை ஓட வைத்தவள் – நியா 4:3 – 5:14
5. கிதியோன்: இவர் மனாசே கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது ஆட்சி காலம் நாற்பது ஆண்டுகள். 300 பேருடன் சென்று 135000 மீதியானியரைக் கொன்றார் – நியா 6:11 – 8:29
6. அபிமலேக்கு: இவர் மனாசே கோத்திரத்தைச் சேர்ந்தவர். தன் சகோதரர் எழுபது பேரைக் கொன்று மூன்று ஆண்டுகள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார் – நியா 8:30 – 9:57
7. தோலா: இவர் இசக்கார் கோத்திரத்தைச் சார்ந்தவர். இவரது ஆட்சி காலம் இருபத்துமூன்று ஆண்டுகள். இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார் – நியா 10:1,2
8. யாவீர்: கீலேயாத் தேசத்திலுள்ளவர். இவரது ஆட்சி காலம் இருபத்திரண்டு ஆண்டுகள். இவருக்கு முப்பது குமாரர்கள் இருந்தனர். இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார் – நியா 10:3
9. யெப்தா: கீலேயாத் தேசத்திலுள்ளவர். இவரது ஆட்சி காலம் ஆறு ஆண்டுகள். அம்மோனியரை அழித்தார் – நியா 11:1 – 12 : 7
10. இப்சான்: இவர் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது ஆட்சி காலம் ஏழு வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார் – நியா 12:8 – 10
11. ஏலோன்: இவர் செபுலோன் கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவர் பத்து வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார் – நியா 12:11, 12
12. அப்தோன்: இவர் எப்பீராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவர் எட்டு ஆண்டுகள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார் – நியா 12:13 – 15
13. சிம்சோன்: இவர் தாண் கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது ஆட்சி காலம் இருபது ஆண்டுகள். ஆயிரக்கணக்கான பெலிஸ்தியரைக் கொன்றார் – நியா 13:16 – 16:31
14. ஏலி: இவர் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவர் நாற்பது வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார். குடும்பத்தில் கண்டிப்பைக் காட்டத் தவறியவர் – 1சாமு 1:12, 2:11, 4:15 – 18
15. சாமுவேல்: இருபது வருடங்களுக்கு மேல் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார். விசுவாச வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றவர். தேவனுக்கு எபெனேசர் என்று பேரிட்டார் – 1சாமு 3:1, 2:11, 21, 7:12

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago