1. மெசொப்பொத்தாமியா நாட்டில் இருக்கும்போது தேவன் ஆபிரகாமுக்கு தரிசனமானதால் தன் தகப்பனுடன் அங்கிருந்து புறப்பட்டான் – அப் 7 :2 ஆதி 11:31

2. தன் தகப்பன் மரித்து ஆரானில் இருக்கும் போது தேவதரிசனத்தின்படி தனது 75 வது வயதில் கர்த்தர் காண்பிக்கும் தேசத்துக்குப் புறப்பட்டான் – ஆதி 12:1-5

3. ஆரானிலிருந்து தேவ வார்த்தைக்குக் கீழ்படிந்து கானானுக்கு வந்த போது தேவன் அவனுடைய சந்ததிக்குக் கொடுப்பேன் என்று வாக்களித்தார் – ஆதி 12:5-7

4. லோத்து பிரிந்த பின் நாலாவதாக தேவன் அவனுக்குத் தரிசனமாகி “நீ பார்க்கிற இந்த பூமி முழுவதையும், உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன்” என்றார் – ஆதி 13:1-18

5. லோத்தையும் அவன் குடும்பத்தையும் இராஜாக்களோடு யுத்தம் பண்ணி மீட்ட பின் ஆபிரகாமைப் பலப்படுத்தி “நான் உனக்குக் கேடகமும்,உனக்கு மகாப் பெரிய பலனுமாயிருக்கிறேன்” என்று கூற 5வது தரிசனம் உண்டாயிற்று – ஆதி 15 : 1-21

6. ஆபிரகாமின் பெயரை மாற்றவும், விருத்தசேதன உடன்படிக்கை ஏற்படுத்தவும் ஆறாவது தரிசனம் உண்டாயிற்று. “திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்” என்றும் “திரளாய்ப் பெருகப் பண்ணுவேன் என்றும் ஆசிகளைக் கொடுத்தார் – ஆதி 17:1-27

7. சோதோமின் அழிவைக் குறித்து அறிவிக்க கர்த்தர் மம்ரேயின் சம பூமியில் ஏழாவதாக கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமானார். அவன் கொடுத்த விருந்தையும் சாப்பிட்டார் – ஆதி 18 : 1-33

8. ஈசாக்கு பால் மறந்த பின் ஆகாரையும் இஸ்மவேலையும் வெளியே அனுப்பி விடும்படி சொல்ல கர்த்தர் எட்டாவது தரிசனமானார் – ஆதி 21:8-12

9. ஆபிரகாமின் விசுவாசத்தை சோதிக்க ஈசாக்கைப் பலி செலுத்தச் சொல்லி ஒன்பதாவது முறை தரிசனமானார் – ஆதி 22:1,2

10. ஈசாக்கைப் பலிபீடத்தில் கிடத்தப் பட்டிருக்கும் போது கர்த்தர் பத்தாவது தடவையாக தரிசனமாகி அவனோடு பேசி பூரண ஆசீர்வாதத்தைக் கட்டளையிட்டார் – ஆதி 22:3-12, 15-18

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago